அம்பு அனைய கண் உமை மடந்தை அவள் அஞ்சி வெருவ,
சினம் உடைக்
கம்ப மதயானை உரிசெய்த அரனார் கருதி மேய இடம் ஆம்
வம்பு மலி சோலை புடை சூழ, மணி மாடம் அது நீடி, அழகு
ஆர்
உம்பரவர்கோன் நகரம் என்ன, மிக மன் உதவி
மாணிகுழியே.