எண்ணம் அது இன்றி, எழில் ஆர் கைலை மாமலை எடுத்த
திறல் ஆர்
திண்ணிய அரக்கனை நெரித்து, அருள்புரிந்த சிவலோகன்
இடம் ஆம்
பண் அமரும் மென்மொழியினார், பணைமுலைப் பவளவாய்
அழகு அது ஆர்
ஒண் நுதல் மடந்தையர், குடைந்து புனல் ஆடு உதவி
மாணிகுழியே.