மந்த மலர் கொண்டு வழிபாடு செயும் மாணி உயிர் வவ்வ
மனம் ஆய்
வந்த ஒரு காலன் உயிர் மாள உதை செய்த மணிகண்டன்
இடம் ஆம்
சந்தினொடு கார் அகில் சுமந்து, தட மா மலர்கள் கொண்டு,
கெடிலம்
உந்து புனல் வந்து வயல் பாயும் மணம் ஆர் உதவி
மாணிகுழியே.