என்றும் அரியான், அயலவர்க்கு; இயல் இசைப்பொருள்கள்
ஆகி எனது உள்
நன்றும் ஒளியான்; ஒளி சிறந்த பொன் முடிக் கடவுள்;
நண்ணும் இடம் ஆம்
ஒன்றிய மனத்து அடியர் கூடி, இமையோர் பரவும் நீடு அரவம்
ஆர்
குன்றுகள் நெருங்கி, விரி தண்டலை மிடைந்து, வளர்
கோகரணமே