திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

பேதை மட மங்கை ஒரு பங்கு இடம் மிகுத்து, இடபம் ஏறி,
அமரர்
வாதைபட வண்கடல் எழுந்த விடம் உண்ட சிவன் வாழும்
இடம் ஆம்
மாதரொடும் ஆடவர்கள் வந்து அடி இறைஞ்சி, நிறை மா
மலர்கள் தூய்,
கோதை வரிவண்டு இசை கொள் கீதம் முரல்கின்ற வளர்
கோகரணமே.

பொருள்

குரலிசை
காணொளி