முன்னம், அடியேன் அறியாமையினான் முனிந்து, என்னை நலிந்து முடக்கியிட,
பின்னை, அடியேன் உமக்கு ஆளும் பட்டேன்; சுடு கின்றது சூலை தவிர்த்து அருளீ
தன்னை அடைந்தார் வினை தீர்ப்பது அன்றோ, தலைஆயவர் அம் கடன் ஆவதுதான்?
அன்னம் நடையார் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!