திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லி

வலித்தேன் மனை வாழ்க்கை, மகிழ்ந்து அடியேன், வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால்;
சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை; சங்கவெண் குழைக் காது உடை எம்பெருமான்! கலித்தே என் வயிற்றின் அகம்படியே கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன,
அலுத்தேன், அடியேன்;-அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!

பொருள்

குரலிசை
காணொளி