பொன் போல மிளிர்வது ஒர் மேனியினீர்! புரி புன் சடையீர்! மெலியும் பிறை
துன்பே, கவலை, பிணி, என்று இவற்றை நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்
என்போலிகள் உம்மை இனித் தெளியார், அடியார் படுவது இதுவே ஆகில்;
அன்பே அமையும்-அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!