திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: தனித் திரு நேரிசை

பாறினாய்,-பாவி நெஞ்சே!-பன்றி போல் அளற்றில் பட்டு
தேறி நீ நினைதி ஆயின், சிவகதி திண்ணம் ஆகும்;
ஊறலே உவர்ப்பு நாறி, உதிரமே ஒழுகும் வாசல்
கூறையால் மூடக் கண்டு கோலமாக் கருதினாயே!

பொருள்

குரலிசை
காணொளி