திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

துணி வண்ணச் சுடர் ஆழி கொள்வான் எண்ணி,
அணி வண்ணத்து அலர்கொண்டு, அடி அர்ச்சித்த
மணி வண்ணற்கு அருள் செய்தவன் மாற்பேறு
பணி வண்ணத்தவர்க்கு இல்லைஆம், பாவமே.

பொருள்

குரலிசை
காணொளி