பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கூற்றம் வந்து குமைத்திடும் போதினால் தேற்றம் வந்து, தெளிவு உறல் ஆகுமே? ஆற்றவும் அருள் செய்யும் வாட்போக்கிபால் ஏற்றுமின், விளக்கை, இருள் நீங்கவே!