நாகம் அரைக்கு அசைத்த நம்பர் இந் நாள் நனிபள்ளி
உள்ளார்; போய் நல்லூர்த் தங்கி
பாகப் பொழுது எலாம் பாசூர்த் தங்கி, பரிதி
நியமத்தார், பன்னிரு நாள்;
வேதமும் வேள்விப் புகையும் ஓவா விரிநீர் மிழலை
எழுநாள்-தங்கி,
போகமும் பொய்யாப் பொருளும் ஆனார்-புலியூர்ச்
சிற்றம்பலமே புக்கார்தாமே.