துறம் காட்டி, எல்லாம் விரித்தார் போலும்; தூ மதியும்
பாம்பும் உடையார் போலும்;
மறம் காட்டி, மும்மதிலும் எய்தார் போலும்; மந்திரமும்
தந்திரமும் தாமேபோலும்;
அறம் காட்டி, அந்தணர்க்கு அன்று ஆலநீழல் அறம்
அருளிச்செய்த அரனார்-இந் நாள்,
புறங்காட்டு எரி ஆடிப் பூதம் சூழ, புலியூர்ச்
சிற்றம்பலமே புக்கார் தாமே.