இறந்தார்க்கும் என்றும் இறவாதார்க்கும்
இமையவர்க்கும் ஏகம் ஆய் நின்று, சென்று
பிறந்தார்க்கும் என்றும் பிறவாதார்க்கும் பெரியான்;
தன் பெருமையே பேச நின்று,
மறந்தார் மனத்து என்றும் மருவார் போலும்;
மறைக்காட்டு உறையும் மழுவாள் செல்வர்-
புறம் தாழ்சடை தாழப் பூதம் சூழ, புலியூர்ச்
சிற்றம்பலமே புக்கார்தாமே.