வெந்தார் வெண்பொடிப் பூசி, வெள்ளை மாலை
விரிசடைமேல்-தாம் சூடி, வீணை ஏந்தி,
கந்தாரம் தாம் முரலா, போகா நிற்க, :கறை
சேர் மணிமிடற்றீர்! ஊர் ஏது?” என்றேன்;
நொந்தார் போல் வந்து எனது இல்லே புக்கு,
“நுடங்கு ஏர் இடை மடவாய்! நம் ஊர் கேட்கில்,
அம் தாமரை மலர் மேல் அளி-வண்டு யாழ்
செய் ஆமாத்தூர்” என்று, அடிகள் போயினாரே.