திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

கல்லலகு தாம் கொண்டு, காளத்தி(ய்)யார், கடிய
விடை ஏறி, காணக்காண
இல்லமே தாம் புகுதா, “இடுமின், பிச்சை!”
என்றாருக்கு எதிர் எழுந்தேன்;எங்கும் காணேன்;
“சொல்லாதே போகின்றீர்;உம் ஊர் ஏது?
துருத்தி? பழனமோ? நெய்த்தான(ம்)மோ?”
அல்லலே செய்து அடிகள் போகின்றார்,
தாம்-அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.

பொருள்

குரலிசை
காணொளி