திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சீகாமரம்

நெற்றிக்கண் உடையானை, நீறு ஏறும் திருமேனிக்
குற்றம் இல் குணத்தானை, கோணாதார் மனத்தானை
பற்றிப் பாம்பு அரை ஆர்த்த படிறன், தன் பனங்காட்டூர்ப்
பெற்றொன்று ஏறும் பிரானை, பேசாதார் பேச்சு என்னே!

பொருள்

குரலிசை
காணொளி