திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சீகாமரம்

பார் ஊரும் பனங்காட்டூர்ப் பவளத்தின் படியானை,
சீர் ஊரும் திரு ஆரூர்ச் சிவன் பேர் சென்னியில் வைத்த
ஆரூரன் அடித்தொண்டன் அடியன் சொல், அடி நாய் சொல்,
ஊர் ஊரன் உரை செய்வார், உயர்வானத்து உயர்வாரே.

பொருள்

குரலிசை
காணொளி