கடுக்கள் தின்று கழி மீன் கவர்வார்கள், மாசு உடம்பினர்,
இடுக்கண் உய்ப்பார் அவர் எய்த ஒண்ணா இடம் என்பரால்
அடுக்க நின்ற(வ்) அற உரைகள் கேட்டு ஆங்கு அவர்
வினைகளைக்
கெடுக்க நின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே.