பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
இலங்கையர் மன்னன் ஆகி எழில் பெற்ற இராவணனைக் கலங்க, ஒர் கால்விரலால், கதிர் போல் முடிபத்து அலற, நலம் கெழு சிந்தையனாய் அருள் போற்றலும், நன்கு அளித்த வலம் கெழு மூ இலைவேல் உடையான் இடம் வக்கரையே.