மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை, வரி வளைக்
கைம் மடமானி,
பங்கயச்செல்வி, பாண்டிமாதேவி பணி செய்து நாள்தொறும்
பரவ,
பொங்கு அழல் உருவன், பூதநாயகன், நால்வேதமும்
பொருள்களும் அருள
அம் கயல்கண்ணிதன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும்
இதுவே.