திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: புறநீர்மை

மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை, வரி வளைக்
கைம் மடமானி,
பங்கயச்செல்வி, பாண்டிமாதேவி பணி செய்து நாள்தொறும்
பரவ,
பொங்கு அழல் உருவன், பூதநாயகன், நால்வேதமும்
பொருள்களும் அருள
அம் கயல்கண்ணிதன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும்
இதுவே.

பொருள்

குரலிசை
காணொளி