திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: புறநீர்மை

மண் எலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச்சோழன்
தன் மகள் ஆம்
பண்ணின் நேர் மொழியாள் பாண்டிமாதேவி பாங்கினால்
பணி செய்து பரவ,
விண் உளார் இருவர் கீழொடு மேலும் அளப்பு அரிது ஆம்
வகை நின்ற
அண்ணலார் உமையோடு இன்பு உறுகின்ற ஆலவாய்
ஆவதும் இதுவே.

பொருள்

குரலிசை
காணொளி