வெற்றவே அடியார் அடிமிசை வீழும் விருப்பினன்,
வெள்ளைநீறு அணியும்
கொற்றவன்தனக்கு மந்திரி ஆய குலச்சிறை குலாவி நின்று
ஏத்தும்
ஒற்றை வெள்விடையன், உம்பரார்தலைவன், உலகினில்
இயற்கையை ஒழிந்திட்டு
அற்றவர்க்கு அற்ற சிவன், உறைகின்ற ஆலவாய் ஆவதும்
இதுவே.