திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: புறநீர்மை

செந்துவர்வாயாள் சேல் அன கண்ணாள், சிவன்
திருநீற்றினை வளர்க்கும்
பந்து அணை விரலாள் பாண்டிமாதேவி பணி செய,
பார் இடை நிலவும்
சந்தம் ஆர் தரளம், பாம்பு, நீர், மத்தம், தண் எருக்கம்மலர்,
வன்னி,
அந்தி வான்மதி, சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய்
ஆவதும் இதுவே.

பொருள்

குரலிசை
காணொளி