திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: புறநீர்மை

கணங்கள் ஆய் வரினும், தமியராய் வரினும், அடியவர்
தங்களைக் கண்டால்,
குணம்கொடு பணியும் குலச்சிறை பரவும் கோபுரம் சூழ்
மணிக் கோயில்
மணம் கமழ் கொன்றை, வாள் அரா, மதியம், வன்னி,
வண் கூவிளமாலை,
அணங்கு, வீற்றிருந்த சடைமுடி அண்ணல் ஆலவாய்
ஆவதும் இதுவே.

பொருள்

குரலிசை
காணொளி