பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மருகல் உறை மாணிக்கத்தை, வலஞ்சுழி(ய்)யின் மாலையை, கருகாவூரில் கற்பகத்தை, காண்டற்கு அரிய கதிர் ஒளியை, பெருவேளூர் எம் பிறப்பு இலியை, பேணுவார்கள் பிரிவு அரிய திரு வாஞ்சியத்து எம் செல்வனை, சிந்தையுள்ளே வைத்தேனே.