திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

“நாதனார்” என்ன, நாளும் நடுங்கினர் ஆகித் தங்கள்
ஏதங்கள் அறிய மாட்டார், “இணை அடி தொழுதோம்” என்பார்
ஆதன் ஆனவன் என்றுஎள்கி,- அதிகைவீரட்டனே!-நின்
பாதம் நான் பரவாது உய்க்கும் பழவினைப் பரிசு இலேனே.

பொருள்

குரலிசை
காணொளி