பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
முன்பனை, உலகுக்கு எல்லாம் மூர்த்தியை, முனிகள் ஏத்தும் இன்பனை, இலங்கு சோதி இறைவனை, அரிவை அஞ்ச வன் பனைத் தடக்கை வேள்விக் களிற்றினை உரித்த எங்கள் அன்பனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!