பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
உரைக்கும் கழிந்து இங்கு உணர்வு அரியான்; உள்குவார் வினையைக் கரைக்கும் எனக் கைதொழுவது அல்லால், கதிரோர்கள் எல்லாம், விரைக்கொள் மலரவன், மால், எண்வசுக்கள், ஏகாதசர்கள், இரைக்கும் அமிர்தர்க்கு, அறிய ஒண்ணான் எங்கள் ஏகம்பனே.