பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கரு உற்ற நாள் முதல் ஆக உன் பாதமே காண்பதற்கு(வ்) உருகிற்று, என் உள்ளமும்; நானும் கிடந்து அலந்து எய்த்தொழிந்தேன்; திரு ஒற்றியூரா! திரு ஆலவாயா! திரு ஆரூரா! ஒரு பற்று இலாமையும் கண்டு இரங்காய்-கச்சி ஏகம்பனே!