திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருவிருத்தம்

இடுக்கு ஒன்றும் இன்றி, எஞ்சாமை உன் பாதம் இறைஞ்சுகின்றார்க்கு
அடர்க்கின்ற நோயை விலக்குகண்டாய்-அண்டம் எண் திசையும்
சுடர்த் திங்கள் சூடி, சுழல் கங்கையோடும் சுரும்பு துன்றி,
படர்க்கொண்ட செஞ்சடையாய்! எம்மை ஆளும் பசுபதியே!

பொருள்

குரலிசை
காணொளி