பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நின்னை எப்போதும் நினையல் ஒட்டாய், நீ; நினையப் புகில் பின்னை அப்போதே மறப்பித்துப் பேர்த்து ஒன்று நாடுவித்தி; உன்னை எப்போதும் மறந்திட்டு உனக்கு இனிதா இருக்கும் என்னை ஒப்பார் உளரோ? சொல்லு, வாழி!-இறையவனே!