திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

பண்ணில் ஓசை, பழத்தினில் இன்சுவை,
பெண்ணொடு ஆண் என்று பேசற்கு அரியவன்,
வண்ணம் இ(ல்)லி, வடிவு வேறு ஆயவன்,
கண்ணில் உள் மணி-கச்சி ஏகம்பனே.

பொருள்

குரலிசை
காணொளி