மத்தமாகளியானை உரிவை போர்த்து, வானகத்தார் தானகத்தார்
ஆகி நின்று,
பித்தர் தாம் போல் அங்கு ஓர் பெருமை பேசி, பேதையரை
அச்சுறுத்தி, பெயரக் கண்டு,
பத்தர்கள் தாம் பலர் உடனே கூடிப் பாடி, “பயின்று இருக்கும்
ஊர் ஏதோ? பணியீர்!” என்ன,
“ஒத்து அமைந்த உத்தரநாள் தீர்த்தம் ஆக ஒளி திகழும்
ஒற்றியூர்” என்கின்றாரே.