மரு உற்ற மலர்க் குழலி மடவாள் அஞ்ச, மலை துளங்கத்
திசை நடுங்கச் செறுத்து நோக்கி,
செரு உற்ற வாள் அரக்கன் வலிதான் மாள, திருவடியின்
விரல் ஒன்றால் அலற ஊன்றி,
உரு ஒற்றி அங்கு இருவர் ஓடிக் காண ஓங்கின அவ் ஒள்
அழலார் இங்கே வந்து,
“திரு ஒற்றியூர், நம் ஊர்” என்று போனார்; செறி வளைகள்
ஒன்று ஒன்றாய்ச் சென்ற ஆறே!.