நிலைப்பாடே நான் கண்டது; ஏடீ, கேளாய்! நெருநலை நன்பகல
இங்கு ஓர் அடிகள் வந்து,
கலைப்பாடும் கண்மலரும் கலக்க, நோக்கி, கலந்து பலி இடுவேன்;
எங்கும் காணேன்;
சலப்பாடே; இனி ஒரு நாள் காண்பேன் ஆகில், தன் ஆகத்து
என் ஆகம் ஒடுங்கும் வண்ணம்,
உலைப்பாடே படத் தழுவி, போகல் ஒட்டேன்-ஒற்றியூர் உறைந்து
இங்கே திரிவானையே.