வல்லராய் வானவர்கள் எல்லாம் கூடி வணங்குவார், வாழ்த்துவார்,
வந்து நிற்பார்,
“எல்லை எம்பெருமானைக் காணோம்” என்ன, எவ் ஆற்றால்
எவ்வகையால் காணமாட்டார்;
நல்லார்கள் நால் மறையோர் கூடி நேடி, “நாம் இருக்கும் ஊர்
பணியீர், அடிகேள்!” என்ன,
“ஒல்லை தான் திரை ஏறி ஓதம் மீளும் ஒளி திகழும் ஒற்றியூர்”
என்கின்றாரே.