கடிய விடை ஏறி, காளகண்டர் கலையோடு மழுவாள் ஓர்
கையில் ஏந்தி,
இடிய பலி கொள்ளார்; போவார் அல்லர்; “எல்லாம் தான்
இவ் அடிகள் யார்?” என்பாரே;
வடிவு உடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர்
கண்டோம்; மயிலாப்புள்ளே
செடி படு வெண்தலை ஒன்று ஏந்தி வந்து, திரு ஒற்றியூர்
புக்கார், தீய ஆறே!.