தாய் அவன் காண், உலகிற்கு; தன் ஒப்பு இல்லாத்
தத்துவன் காண்; “மலை மங்கை பங்கா!” என்பார்
வாயவன் காண்; வரும் பிறவி நோய் தீர்ப்பான் காண்,
வானவர்க்கும் தானவர்க்கும் மண்ணுளோர்க்கும்;
சேயவன் காண், நினையார்க்கு; சித்தம் ஆரத்
திருவடியே உள்கி நினைந்து எழுவார் உள்ளம்
ஏயவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி
ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.