அசைந்தவன் காண், நடம் ஆடிப் பாடல் பேணி;
அழல் வண்ணத்தில்(ல்) அடியும் முடியும் தேடப்
பசைந்தவன் காண்; பேய்க் கணங்கள் பரவி ஏத்தும்
பான்மையன் காண்; பரவி நினைந்து எழுவார் தம்பால்
கசிந்தவன் காண்; கரியின் உரி போர்த்தான் தான்
காண்; கடலில் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் ஈய
இசைந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர்
கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.