பொருப்பள்ளி, வரை வில்லாப் புரம் மூன்று எய்து,
புலந்து அழிய, சலந்தரனைப் பிளந்தான், பொன் சக்-
கரப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி, கள் ஆர் கமழ்
கொல்லி அறைப்பள்ளி, கலவம் சாரல்
சிரப்பள்ளி, சிவப்பள்ளி, செம்பொன்பள்ளி, செழு
நனிபள்ளி, தவப்பள்ளி, சீர் ஆர்
பரப்பள்ளி, என்று என்று பகர்வோர் எல்லாம்
பரலோகத்து இனிது ஆகப் பாலிப்பாரே.