கயிலாயமலை எடுத்தான் கரங்களோடு சிரங்கள்
உரம் நெரியக் கால்விரலால் செற்றோன்
பயில்வு ஆய பராய்த்துறை, தென்பாலைத் துறை, பண்டு
எழுவர் தவத்துறை, வெண்துறை, பைம்பொழில்
குயில் ஆலந்துறை, சோற்றுத்துறை, பூந்துறை,
பெருந்துறையும், குரங்காடு துறையினோடு,
மயிலாடுதுறை, கடம்பந்துறை, ஆவடுதுறை, மற்றும்
துறை அனைத்தும் வணங்குவோமே.