மலையார் தம் மகளொடு மாதேவன் சேரும்
மறைக்காடு; வண்பொழில் சூழ் தலைச்சங்காடு;
தலையாலங்காடு; தடங்கடல் சூழ் அம் தண்
சாய்க்காடு; தெள்ளு புனல் கொள்ளிக்காடு;
பலர் பாடும் பழையனூர் ஆலங்காடு;
பனங்காடு; பாவையர்கள் பாவம் நீங்க,
விலை ஆடும் வளை திளைக்க, குடையும் பொய்கை
வெண்காடும்; அடைய வினை வேறு ஆம் அன்றே.