உதைத்தவன் காண், உணராத தக்கன் வேள்வி உருண்டு
ஓட; தொடர்ந்து அருக்கன் பல்லை எல்லாம்
தகர்த்தவன் காண்; தக்கன் தன் தலையைச் செற்ற
தலையவன் காண்; மலைமகள் ஆம் உமையைச் சால
மதிப்பு ஒழிந்த வல் அமரர் மாண்டார் வேள்வி
வந்து அவி உண்டவரோடும் அதனை எல்லாம்
சிதைத்தவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய
சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.