திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

அறுத்தவன் காண், அடியவர்கள் அல்லல் எல்லாம்;
அரும்பொருள் ஆய் நின்றவன் காண்; அநங்கன் ஆகம்
மறுத்தவன் காண்; மலை தன்னை மதியாது ஓடி,
மலைமகள் தன் மனம் நடுங்க, வானோர் அஞ்ச,
கறுத்தவனாய், கயிலாயம் எடுத்தோன் கையும் கதிர்
முடியும் கண்ணும் பிதுங்கி ஓடச்
செறுத்தவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய
சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.

பொருள்

குரலிசை
காணொளி