அந்தகனை அயில் சூலத்து அழுத்திக் கொண்டார்; அரு
மறையைத் தேர்க்குதிரை ஆக்கிக் கொண்டார்;
சுந்தரனைத் துணைக் கவரி வீசக் கொண்டார்; சுடுகாடு
நடம் ஆடும் இடமாக் கொண்டார்;
மந்தரம் நல் பொரு சிலையா வளைத்துக் கொண்டார்;
மாகாளன் வாசல் காப்பு ஆகக் கொண்டார்;
தந்திர மந்திரத்தராய் அருளிக் கொண்டார் சமண்
தீர்த்து என் தன்னை ஆட் கொண்டார் தாமே.