சடை ஒன்றில் கங்கையையும் தரித்துக் கொண்டார்; சாமத்தின்
இசை வீணை தடவிக் கொண்டார்;
உடை ஒன்றில் புள்ளி உழைத்தோலும் கொண்டார்; உள்குவார்
உள்ளத்தை ஒருக்கிக் கொண்டார்;
கடை முன்றில் பலி கொண்டார்; கனலும் கொண்டார்; காபால
வேடம் கருதிக் கொண்டார்;
விடை வென்றிக் கொடி அதனில் மேவக் கொண்டார்
வெந்துயரம் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே.