தற்பரம் பொருளே ! சசிகண்ட சிகண்டா !
சாமகண் டா ! அண்ட வாணா !
நற்பெரும் பொருளாய் ! உரைகலந் துன்னை
என்னுடை நாவினால் நவில்வான்
அற்பன்என் உள்ளத் தளவிலா உன்னைத்
தந்தபொன் னம்பலத் தரசே !
கற்பமாய், உலகாய், அல்லைஆ னாயைத்
தொண்டனேன் கருதுமா கருதே.