மடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக்
கருள்புரி வள்ளலே ! மருளார்
இடங்கொள்முப் புரம்வெந் தவியவை திகத்தேர்
ஏறிய ஏறுசே வகனே!
அடங்கவல் லரக்கன் அரட்டிரு வரைக்கீழ்
அடர்த்தபொன் னம்பலத் தரசே!
விடங்கொள்கண் டத்தெம் விடங்கனே உன்னைத்
தொண்டனேன் விரும்புமா விரும்பே.