தக்கன்நற் றலையும் எச்சன்வன் றலையும்
தாமரை நான்முகன் தலையும்
ஒக்கவிண் டுருள ஒண்டிருப் புருவம்
நெறித்தரு ளியஉருத் திரனே!
அக்கணி புலித்தோ லாடைமேல் ஆட
ஆடப்பொன் னம்பலத் தாடும்
சொக்கனே! எவர்க்கும் தொடர்வரி யாயைத்
தொண்டனேன் தொடருமா தொடரே.